குஜராத்: ஓடும் ரயிலில் பாஜக முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேஜி நக்ரி விரைவு ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ ஜெயந்திலால் பனுஷாலியாவை நேற்று இரவு கதாரியா - சுர்பரி ரயில் நிலையங்களுக்கு இடையே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிய ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவகின்றனர்.