ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: உத்தவ் தாக்கரேவுடன் பட்னவீஸ் ஆலோசனை

மும்பையில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சிவசேனைத் தலைவர் உத்தவ்

Updated On :15 ஜனவரி 2019, 1:15 am IST


மும்பையில் அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் பிருஹன் மும்பை மின்வாரியம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 32,000 தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நகரில் 3,200 பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மும்பை மாநகராட்சி பட்ஜெட்டையும், போக்குவரத்துக் கழக பட்ஜெட்டையும் ஒன்றாக இணைக்க வேண்டும்; ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், சிவசேனைக் கட்சியின் தொழிலாளர் சங்கமான பெஸ்ட் காம்கர் சேனாவும் பங்கேற்றுள்ளது. மும்பை மாநகராட்சியில் ஆளும் கட்சியாக சிவசேனைக் கட்சி உள்ளது. மேலும், அக்கட்சியைச் சேர்ந்த மேயர், போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக உள்ளார். இந்நிலையில், மும்பை மாநகராட்சி பட்ஜெட்டையும், போக்குவரத்துக் கழக பட்ஜெட்டையும் ஒன்றாக இணைப்பதற்கு சிவேசனை தலைவர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்தார். 
மேலும், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு பேச்சுவாரத்தை மூலமே தீர்வுகாண முடியும்; போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், தேவைப்பட்டால் பேச்சுவார்த்தையில் பங்கற்கத் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, இந்தப் பிரச்னையில் மாநில அரசு திங்கள்கிழமை தலையிட்டது. மும்பையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள மந்த்ராலயத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து தலைமைச் செயலர் டி.கே.ஜெயின் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
அதைத் தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவுடன் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அவர்கள் விவாதித்த விஷயங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.