காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை 

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை 

புது தில்லி: காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சீக்கிய அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என சீக்கியத் தீவிரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு போராடி வருகிறது. அமெரிக்காவைத் தலையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கின்றது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் உலகின் பிற பகுதிகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது தொடர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

அத்துடன் பஞ்சாப்பை தனிநாடாக அறிவிப்பது தொடர்பாக அடுத்த ஆண்டு அங்குள்ள சீக்கியர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்த அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாலும், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாலும் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com