மும்பை: வட மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பரவலாக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதே சமயம், சட்டீஸ்கர், தெலங்கானா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், விதர்பா, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.