வடமாநிலங்களை விடாது துரத்தும் கனமழை: 48 மணி நேர எச்சரிக்கை!

வட மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பரவலாக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமாநிலங்களை விடாது துரத்தும் கனமழை: 48 மணி நேர எச்சரிக்கை!
Updated on
1 min read


மும்பை: வட மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பரவலாக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதே சமயம், சட்டீஸ்கர், தெலங்கானா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத், விதர்பா, மத்தியப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் ஒரு சில பகுதிகளிலும் மிகக் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com