புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி தில்லியில் கைது

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். 
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி தில்லியில் கைது
Published on
Updated on
1 min read

புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதி கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். 

நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பாலாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை விமானங்கள் கடந்த மாதம் 26-ஆம் தேதி குண்டு வீச்சு நடத்தின. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெயஷ் இ-முகமது அமைப்பு பயங்கரவாதி சஜத்கான் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி சஜத்கான் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிரின் நெருங்கிய கூட்டாளி எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com