ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது: யோகி ஆதித்யநாத்

ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 
ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது: யோகி ஆதித்யநாத்
Published on
Updated on
1 min read

ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில்,

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தால் மட்டுமே பொது வாழ்க்கையில் நீடித்திருக்க முடியும். இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களின் மத்தியில் நடைபெற்றது.

வாக்காளர்களின் உற்சாகம் நாட்டின் ஜனநாயகத்தின் முதர்ச்சியைக் காட்டுகிறது. இந்த தேர்தல் நடைபெற்ற விதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

நாடு முழுவதும் ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com