ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்க உள்ளளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெகன்மோகன் ரெட்டி தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து, 30-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து அவர் அழைப்பு விடுத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

உடல் எடை குறையும்! ஆளி விதையில் இவ்வளவு நன்மைகளா?

திமுகவின் மறுபிரதியே தவெக! பாஜக விமர்சனம்

சர்தார் - 2 வெளியீட்டுத் தேதி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



