ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

சேவல் மீது காவல்துறையில் புகார் கொடுத்த இளம்பெண்: காரணம் என்ன தெரியுமா? 

மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் சேவல் ஒன்றின் மீது ஒரு விநோத புகாரை காவல்துறையில் அளித்துள்ளார். 

News image
Updated On :26 மே 2019, 7:05 am

DIN

புனே: மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் சேவல் ஒன்றின் மீது ஒரு விநோத புகாரை காவல்துறையில் அளித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ளது சோம்வார் பேட்டை பகுதி. இங்கு வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவுகிறது. இதனால் எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி சோம்வார் பேட்டை பகுதி போலீசார் கூறியதாவது:

அந்த இளம்பெண்ணின் புகாரைப் பெற்று கொண்டோம். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த பெண் அவரது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான்  அங்கு வந்த அந்த அந்தப் பெண் புகார் கொடுத்து விட்டு சென்று உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

அதனைத் தொடர்ந்து இங்குள்ள பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் எனது சகோதரி சற்று மனநிலை பாதித்தவள் என கூறி விட்டார். எனவே இந்த விவகாரத்தில் முறைப்படி புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.