விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சேவல் மீது காவல்துறையில் புகார் கொடுத்த இளம்பெண்: காரணம் என்ன தெரியுமா? 

மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் சேவல் ஒன்றின் மீது ஒரு விநோத புகாரை காவல்துறையில் அளித்துள்ளார். 

News image
Updated On :26 மே 2019, 7:05 am

புனே: மஹாராஷ்டிராவில் இளம்பெண் ஒருவர் சேவல் ஒன்றின் மீது ஒரு விநோத புகாரை காவல்துறையில் அளித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ளது சோம்வார் பேட்டை பகுதி. இங்கு வசித்து வரும் பெண் ஒருவர் சமீபத்தில் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில் அவர் தினமும் காலையில் எனது வீட்டின் முன் சேவல் ஒன்று வந்து நின்று கூவுகிறது. இதனால் எனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி சோம்வார் பேட்டை பகுதி போலீசார் கூறியதாவது:

அந்த இளம்பெண்ணின் புகாரைப் பெற்று கொண்டோம். இதுகுறித்து விசாரித்தபோது, அந்த பெண் அவரது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான்  அங்கு வந்த அந்த அந்தப் பெண் புகார் கொடுத்து விட்டு சென்று உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

அதனைத் தொடர்ந்து இங்குள்ள பெண்ணின் சகோதரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் எனது சகோதரி சற்று மனநிலை பாதித்தவள் என கூறி விட்டார். எனவே இந்த விவகாரத்தில் முறைப்படி புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.