
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலை. மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.
கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் கல்விக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
குறைந்தபட்சம் 40 சதவீத மாணவர்கள் ஏழ்மைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களால் எவ்வாறு தங்கள் மேற்படிப்பை தொடர முடியும் என்று குற்றம்சாட்டி தில்லி ஜவஹர்லால் நேரு மாணவர்கள் அமைப்பு இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.