கல்யாண் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பிக் பி என்று அன்போடு அழைக்கப்படும் அமிதாப் பச்சான், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலம் திரிசூரில் உள்ள கல்யாண் நகைக் கடை உரிமையாளர் கல்யாணராமன் குடும்பத்தினர் நடத்திய நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு முக்கியப் பிரபலங்கள், திரையுலக ஜாம்பவான்கள், அரசியல் பிரமுகர்கள், மாநில அமைச்சர்கள் என நவராத்திரி விழா கலைகட்டியது.
விதவிதமான பொம்மைகளும், கடவுளின் திருவுருவச் சிலைகளும் அலங்கரித்த இந்த நவராத்திரி பூஜையைக் காண திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர், நடிகைகள் பங்கேற்றனர்.