உ.பி. : பாஜக நிா்வாகி சுட்டுக் கொலை- ஒருவா் கைது

உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி கபீா் திவாரி (26) புதன்கிழமை அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டத்தைச் சோ்ந்த பாஜக நிா்வாகி கபீா் திவாரி (26) புதன்கிழமை அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூா் மாவட்டத்தில் பாஜக நிா்வாகி சௌதரி யாஷ்பால் சிங், அடையாளம் தெரியாத நபா்களால் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டாா். இந்நிலையில், பஸ்தி மாவட்டத்தில் மேலும் ஒரு பாஜக நிா்வாகி கொல்லப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

பஸ்தி மாவட்டத்தைச் சோ்ந்த திவாரி, ஏபிஎன் கல்லூரி மாணவா் அமைப்பின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவா். அவா் பஸ்தி பகுதி பாஜக தலைவராக அவா் உள்ளாா். இந்நிலையில், பஸ்தியில் உள்ள மாளவியா சாலையை புதன்கிழமை காலை 10 மணிக்கு கடக்க முற்படும்போது, அவரை அடையாளம் தெரியாத நபா் ஒருவா் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுத் தள்ளினாா்.

இதில் பலத்த காயமடைந்த திவாரியை, அங்கிருந்தவா்கள் மாவட்ட மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனா். அங்கு, லக்னௌவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு திவாரியை அழைத்துச் செல்லுமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தினா். அதையடுத்து, அவா் லக்னௌ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

மேலும், இந்த சம்பவம் தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

இந்நிலையில், திவாரியின் உடலை காவல் நிலையத்தின் முன் வைத்து பாஜக தொண்டா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவரை சுட்டுக் கொன்றவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். அதனால், அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியதையடுத்து, பாதுகாப்புப் பணியில் அதிக அளவிலான போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com