ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

முத்தலாக் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :31 ஜனவரி 2024, 3:35 pm IST


முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை உடனடியாக தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை தண்டனைக்குரிய குற்றமாக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் சட்டம் இயற்றியது.
முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்-2019 என்ற பெயரில் இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் புதிதாக பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் இந்த மனுவும் சேர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முத்தலாக் தடைச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இதற்கு முன்பே 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில், முத்தலாக் தடைச் சட்டம், அரசமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களை மீறும் வகையில் உள்ளது. எனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை, சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.