ராணுவத்துக்கு ரூ. 2,000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பான முடிவுகளை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ராணுவத் தளவாட கொள்முதல் கவுன்சில் எடுத்து வருகிறது.
இந்தக் கவுன்சிலின் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், ராணுவத்துக்கு சுமார் ரூ. 2,000 கோடி மதிப்பில் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் டி72, டி90 ஆகிய பீரங்கிகளை உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரிப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நிலத்தில் கண்ணிவெடிகளை பதிக்கும் இயந்திரங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பிடம் (டிஆர்டிஓ) இருந்து கொள்முதல் செய்வதற்கும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு!
ஜன நாயகனில் மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய்?
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


