தொடர்ச்சியான மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷனின் (ஜி.எச்.எம்.சி) அவசர குழு புயல் நீர் வடிகால்களில் உள்ள பாதிப்புகளை சீர் செய்யும் நடவடிக்கையை உடனுக்குடன் மேற்கொண்டது
முன்னதாக, மாநில நகர மேம்பாட்டு மற்றும் நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.டி.ராமராவ், ஹைதராபாத் மாநகரில் செப்டம்பர் மாதத்தில் அதிக மழை பெய்துள்ளது என்று கூறினார். " இது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் செப்டம்பர் மாதத்தில் பெய்த மிக அதிகமான மழைப்பொழிவை நாங்கள் காண்கிறோம்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.