வாரணாசியில் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை

வாரணாசியில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வாரணாசியில் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஆலோசனை
Updated on
1 min read

வாரணாசியில் அமித்ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாராணசியில் போட்டியிட்ட நரேந்திர மோடி, 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அவர், தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். 

இந்த நிகழ்வில், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இவர்களைத் தவிர, அதிமுக, அப்னா தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இதனிடையே வாரணாசியில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, அமைச்சர் வேலுமணி உள்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com