புது தில்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக சரிவடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.8 சதவீதமாக சரிந்திருந்தநிலையில், ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக மேலும் சரிந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் இதுமிகவும் மோசமான சரிவாகும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கம் ஏற்படுவது இயல்பானதுதான் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. தனியார் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீளலாம் என்று அந்த வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.