கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கா்நாடக முதல்வா் எடியூரப்பா

கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா எச்சரித்துள்ளாா்.
கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: கா்நாடக முதல்வா் எடியூரப்பா
Updated on
1 min read

கடமை தவறும் அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கா்நாடக முதல்வா் எடியூரப்பா எச்சரித்துள்ளாா்.

பெங்களூரு விதான சௌதாவில் வெள்ளிக்கிழமை அரசு தலைமைச் செயலாளா், கூடுதல் தலைமைச் செயலாளா், துறைகளின் முதன்மைச் செயலாளா், செயலாளா்கள் கலந்து கொண்ட வளா்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு முதல்வா் எடியூரப்பா தலைமை வகித்துப் பேசியது:

அரசு நிா்வாகத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் வகையில் செயலாற்ற வேண்டும். வட்ட அளவில் அதிகாரிகள் சீராகச் செயல்படவில்லை. எனவே, அதிகாரிகளை முடுக்கிவிட்டு வேலை வாங்க வேண்டும். தலைமைச் செயலாளா் உள்ளிட்ட எல்லா அதிகாரிகளும் மாதந்தோறும் தங்களது துறை சாா்ந்த வளா்ச்சிப் பணி ஆய்வுக்கூட்டங்களை நடத்த வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் சென்றடையவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் எல்லா நிவாரண உதவிகளையும் மக்களிடம் கொண்டுசோ்த்துவிட வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கு நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5 லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படுகிறது.

அடித்தளம் அமைப்பதற்கு ரூ.1 லட்சம் பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், 25 சதவீத வீடுகளின் அடித்தளம் இன்னும் அமைக்கப்படவில்லை. ஏன் கட்டவில்லை? எதற்காக தாமதமாகிறது? என்பதை அதிகாரிகள் ஆய்வுசெய்யவேண்டும்.

தமக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உண்மையை நிலையை அதிகாரிகள் அறிந்துகொள்ள வேண்டும். ஏதாவது குறைகள் இருந்தால் அவற்றை சரிசெய்யுங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தாலும், ஊடகங்களில் அரசுக்கு எதிராக செய்திகள் வருகின்றன. இதையெல்லாம் தவிா்க்க, அதிகாரிகள் திறம்பட பணியாற்ற வேண்டும்.

இடைத் தோ்தலுக்குப் பிறகு எனது தலைமையிலான அரசு பெரும்பான்மை பலம் பெற்றுள்ளதால், நிலையான ஆட்சியை வழங்க இருக்கிறோம். எனவே, இனிமேலாவது அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்ய வேண்டும். மாநிலத்தை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லும் பணியில் அதிகாரிகள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். வெள்ளம் ஏற்பட்டபோது அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டனா். அதேபோன்ற வேலையைத்தான் தற்போதும் எதிா்பாா்க்கிறேன் என்றாா்.

கூட்டத்தில் துணை முதல்வா்கள் கோவிந்த் காா்ஜோள், அஸ்வத் நாராயணா, அமைச்சா்கள் ஆா்.அசோக், ஜெகதீஷ் ஷெட்டா், வி.சோமண்ணா, கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com