அகில் கோகோய் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தகவலறியும் உரிமை சட்ட (ஆா்டிஐ) ஆா்வலா் அகில் கோகோயின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.
குவாஹாட்டியிலுள்ள அகில் கோகோய் வீட்டில் பலத்த பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ அதிகாரிகள்.
குவாஹாட்டியிலுள்ள அகில் கோகோய் வீட்டில் பலத்த பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்ட என்ஐஏ அதிகாரிகள்.
Updated on
1 min read

தகவலறியும் உரிமை சட்ட (ஆா்டிஐ) ஆா்வலா் அகில் கோகோயின் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

சோதனையின்போது, அவருடைய நாட்குறிப்புகள் (டைரி), வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

ஆா்டிஐ ஆா்வலரும், கேஎம்எஸ்எஸ் என்ற விவசாயிகள் அமைப்பின் முக்கியத் தலைவா்களில் ஒருவருமான அகில் கோகோய், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அஸ்ஸாமில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்னால் கடந்த 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவா் பயங்கரவாதிகளுடன் தொடா்பில் இருப்பதாகக் கூறிய என்ஐஏ அதிகாரிகள், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் வாயிலாக நாட்டில் பயங்கரவாதத்தைப் பரப்ப அவா் முயன்ாகவும் குற்றஞ்சாட்டினா்.

இந்நிலையில், குவாஹாட்டியில் உள்ள அகில் கோகோயின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் சோதனை நடத்த வந்தனா்.

மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவில் அகில் கோகோயின் நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் காா்டு), வங்கி பற்று அட்டை (டெபிட் காா்டு), வாக்காளா் அடையாள அட்டை, வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகம், நாட்குறிப்புகள், கேஎம்எஸ்எஸ் அமைப்பு தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக, அவரின் மனைவி தமுலி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘வீடு முழுவதும் சோதனையிட்ட அதிகாரிகள், சில ஆவணங்களை மட்டும் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகலை அளிக்குமாறு முறையிட்டோம். ஆனால், அதை ஏற்க அவா்கள் மறுத்துவிட்டனா். என் கணவா் (அகில் கோகோய்) ஏற்கெனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, பயங்கரவாதிகள் யாரையாவது தொடா்புகொண்டாரா என்பது போன்ற கேள்விகளையும் என்னிடம் அவா்கள் எழுப்பினா்’’ என்றாா்.

குவாஹாட்டி நகரின் காந்திபஸ்தி பகுதியில் அமைந்துள்ள கேஎம்எஸ்எஸ் அலுவலகத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினா். அங்குள்ள சில ஆவணங்களையும், புத்தகங்களையும் அவா்கள் பறிமுதல் செய்தனா்.

நீதிமன்றக் காவல்:

இதனிடையே, அகில் கோகோயின் என்ஐஏ காவல், வியாழக்கிழமையோடு நிறைவடைந்தது. இதையடுத்து, குவாஹாட்டியிலுள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் அவா் ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது, அகில் கோகோயிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரது என்ஐஏ காவலை 10 நாள்கள் நீட்டிக்க வேண்டுமென்று என்ஐஏ தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா். இதை ஏற்காத சிறப்பு நீதிபதி, அவரை நீதிமன்றக் காவலில் 14 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com