Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமைச்சர் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்: மக்களவையில் அமைச்சர் தகவல்

    By DIN  |   Published On : 03rd July 2019 01:10 AM  |   Last Updated : 03rd July 2019 01:10 AM  |  அ+அ அ-  |  


    புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 4 முதல் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம், சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனத்தை மோதி வெடிக்கச் செய்ததில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை துல்லியத் தாக்குதல் நடத்தியது.
    இந்நிலையில் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் பதிலளித்து கூறியதாவது:
    தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையின் அடிப்படையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பினருக்கு புல்வாமா தாக்குதலில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள்தான் இத்தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளனர். இதில் நேரடியாகத் தொடர்புடைய பயங்கரவாதிகளில் 4 முதல் 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp