
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் காயமடைந்தனர்.
குல்காம் மாவட்டம், அதிகாம் கிராமத்தில் இக்குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் அந்த கிராமவாசிகள் 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.