மஹாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. கோதாவரி நதிக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்திரபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் கால்நடைகள் அடித்துச் செல்லப்படும் அதிர்ச்சிக்குரிய காட்சிகள் வெளியாகியுள்ளன.