சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு

சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இ.கோபிநாத் (88) ஞாயிற்றுக்கிழமை மறைந்தார்.
சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு
Updated on
1 min read

சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இ.கோபிநாத் (88) சனிக்கிழமை மறைந்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் தமிழக ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த இ.கோபிநாத், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கியவர்.

சுதந்திரத்துக்குப் பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக நாட்டின் முதலாவது தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்கியவர். சமீபத்தில் நடந்து முடிந்த 17-ஆவது மக்களவைத் தேர்தல் வரை பணிகளைத் தொடர்ந்தவர்.

அதுமட்டுமல்லாமல் சே குவாரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரை பேட்டி கண்ட நாட்டின் முதல் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெற்றவர்.

அவருடைய மறைவுக்கு பத்திரிகையாளர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com