
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் ஏப்.2ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்க இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஏப்.2ஆம் தேதி தமிழகம் வருகிறார். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...