மேற்கு திரிபுரா தொகுதி தேர்தல் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திரிபுரா(மேற்கு)  மக்களவைத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, வரும் 21-ஆம்
Updated on
1 min read


அகர்தலா:  திரிபுரா(மேற்கு)  மக்களவைத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு திரிபுரா உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில்  உள்ள 2 மக்களவைத் தொகுதிகளில்,  திரிபுரா(மேற்கு )  தொகுதிக்கு  கடந்த மாதம் 11-ஆம் தேதியும், திரிபுரா(கிழக்கு)  தொகுதிக்கு கடந்த மாதம்  23-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. 

திரிபுரா (மேற்கு) தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலின்போது, மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சியினரால் பெரிய அளவில் வன்முறை நிகழ்த்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதையடுத்து, அந்த தொகுதியில் உள்ள 1679 வாக்குச்சாவடிகளில், 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில், ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து விட்டு, அந்த தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த  தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருமான சங்கர் பிரசாத் தத்தா கடந்த 15-ஆம் தேதி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, "திரிபுரா(மேற்கு) மக்களவைத்  தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு  நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com