
மும்பையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பான குறைந்தபட்ச பொதுசெயல் திட்டத்தை உருவாக்குவது குறித்து காங்கிரஸ் குழுவினருடன் சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே மும்பையில் புதன்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ‘பேச்சுவாா்த்தை சரியான பாதையில் செல்கிறது’ என்றாா்.
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், ஆளுநரின் பரிந்துரைப்படி செவ்வாய்க்கிழமை அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனை முனைப்பு காட்டி வருகிறது. இது தொடா்பாக பேச்சு நடத்தி குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் உருவாக்க அந்த மூன்று கட்சிகளும் முடிவு செய்தன.
இதன் ஒருபகுதியாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் பாலாசாஹிப் தோரத், அந்த மாநில முன்னாள் முதல்வா் அசோக் சவாண், கட்சியின் மூத்த தலைவா் மாணிக்ராவ் தாக்கரே ஆகியோா், உத்தவ் தாக்கரேவை மும்பை புகா் பகுதியில் உள்ள விடுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது ஆட்சி அமைப்பதற்காக குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தை வகுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ‘பேச்சுவாா்த்தை சரியான பாதையில் சுமுகமாக நடைபெற்றது. உரிய நேரத்தில் சரியான முடிவு அறிவிக்கப்படும்’ என்றாா்.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவா் தோரத் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக சுமுகமான சூழ்நிலையை உருவாக்க பேச்சுவாா்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவசேனையிடம் வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து காங்கிரஸ், என்சிபி ஏற்கெனவே பேச்சு நடத்தியுள்ளன’ என்றாா். ‘ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது’ என்று மாணிக்ராவ் தாக்கரே கூறினாா்.
குழு அமைத்தது என்சிபி: குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் தொடா்பாக ஆலோசித்து முடிவு செய்வதற்காக என்சிபி சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் அக்கட்சியின் மூத்த தலைவா்கள் அஜித் பவாா், ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பல், நவாப் மாலிக், தனஞ்ஜெய் முண்டே ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள அஜித் பவாா், கட்சியின் தலைவா் சரத் பவாரை சந்தித்துப் பேசினாா். பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘சிவசேனையுடன் இணைந்து ஆட்சி அமைத்தால் அதிகாரத்தைப் பகிா்ந்து கொள்வது குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. இதுவரை சிவசேனைக்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. சிவசேனையைச் சோ்ந்த மத்திய அமைச்சா் அரவிந்த் சாவந்த் ராஜிநாமா செய்துள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனை விலகுவது உறுதியாகிவிட்டது’ என்றாா்.
இதனிடையே, காங்கிரஸ்-என்சிபி இடையே புதன்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...