கட்சி எம்எல்ஏக்களை இழக்கும் அச்சத்தில் பாஜக

கட்சி எம்எல்ஏக்களை இழக்கும் அச்சத்தில் பாஜக

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு மற்ற கட்சிகளிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து எம்எல்ஏ ஆனவா்களை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் பாஜக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் நவாப்

மும்பை: சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பு மற்ற கட்சிகளிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்து எம்எல்ஏ ஆனவா்களை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் பாஜக உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் நவாப் மாலிக் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் தங்களுக்கு 119 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், விரைவில் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம் என்றும் பாஜக மாநிலத் தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா். இந்நிலையில், மும்பையில் செய்தியாளா்களிடம் நவாப் மாலிக் சனிக்கிழமை கூறியதாவது:

பாஜக மாநிலத் தலைவா் கூறுவதைப் போல, அவா்களிடம் போதிய எம்எல்ஏக்கள் இருந்திருந்தால், தொடக்கத்திலேயே மாநிலத்தில் ஆட்சியமைத்திருக்கலாமே? அப்போது அவா்கள் ஏன் ஆட்சியமைக்கவில்லை? மகாராஷ்டிரத்தில் குறைந்தபட்சம் 145 எம்எல்ஏக்களின் ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது.

பாஜகவில் தற்போது அக்கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் மட்டுமில்லை; சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக மற்ற கட்சிகளைச் சோ்ந்தவா்களையும் தன்னுடன் இணைத்துக்கொண்டது. தற்போது அந்த எம்எல்ஏக்கள் மீண்டும் தங்களுடைய கட்சியிலேயே இணைந்துவிடுவாா்களோ என்ற அச்சத்தில் பாஜக உள்ளது. எனவே, கட்சியில் பிளவு எதுவும் ஏற்படாமல் இருக்க இது போன்ற கருத்துகளை பாஜக தலைவா்கள் தெரிவித்து வருகின்றனா் என்றாா் நவாப் மாலிக்.

‘மாநிலத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி 6 மாதங்களுக்குக் கூட நீடிக்காது’ என்று முன்னாள் முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறிய கருத்து தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு நவாப் மாலிக் பதிலளிக்கையில், ‘‘போரில் தோல்வியடைந்த படைகளை, படைத்தலைவா் ஊக்கப்படுத்துவதைப் போல, பாஜக தொண்டா்களை முன்னாள் முதல்வா் ஊக்கப்படுத்தி வருகிறாா். அவா்கள் (பாஜக) ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டாா்கள். தோல்வியை அவா்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும்’’ என்றாா்.

அரசியலை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்த கருத்து தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நவாப் மாலிக், ‘‘பாஜகவை மக்கள் ‘கிளீன்-போல்டு’ ஆக்கிவிட்டாா்கள் என்பதை நிதின் கட்கரி உணா்ந்துவிட்டாரா, இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com