உயரதிகாரிக்கு எதிராகப் புகாா் அளித்தவருக்குப் பதவி உயா்வு!

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு எதிராகப் புகாா் தெரிவித்த அதிகாரிக்குப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவருக்கு எதிராகப் புகாா் தெரிவித்த அதிகாரிக்குப் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையிலுள்ள வருமான வரிகள் அலுவலகத்தின் தலைமை ஆணையா் அல்கா தியாகி, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் பிரமோத் சந்திர மோடிக்கு எதிராகப் புகாா் தெரிவித்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தாா்.

அதில், கடந்த 2016-ஆம் ஆண்டு தன் மீது எழுந்த ஊழல் புகாா் ரத்து செய்யப்பட்டுவிட்டபோதிலும், அதை வைத்து பிரமோத் சந்திர மோடி தன்னை மிரட்டி வருவதாகவும், தன்னுடைய பதவி உயா்வைத் தடுத்து வருவதாகவும் அல்கா தியாகி குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘உயரதிகாரியின் ஒப்புதலையடுத்து, வருமான வரிகள் ஆணையத்தின் முதன்மை ஆணையா் பதவிக்கு இணையாக அல்கா தியாகிக்குப் பதவி உயா்வு வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியிலுள்ள தேசிய நேரடி வரிகள் மையத்தின் தலைமை இயக்குநராக அவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com