நேற்று என் கையில் இருந்தது என்ன தெரியுமா? டிவிட்டரில் விளக்கிய பிரதமர் மோடி!

மாமல்லபுரத்தில் குப்பைகளைச் சேகரித்தபோது தன் கையில் இருந்தது, அக்குபிரஷர் உபகரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளார்.
நேற்று என் கையில் இருந்தது என்ன தெரியுமா? டிவிட்டரில் விளக்கிய பிரதமர் மோடி!


மாமல்லபுரத்தில் குப்பைகளைச் சேகரித்தபோது தன் கையில் இருந்தது, அக்குபிரஷர் உபகரணம் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளார்.

சீன அதிபர் ஷி ஜினிபிங்குடனான வரலாற்றுச் சிறப்பு சந்திப்புக்காக பிரதமர் நரேந்திர மோடி கோவளம் தாஜ் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். இதில், இரண்டாம் நாள் சந்திப்புக்கு முன்னதாக மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த குப்பைகளைச் சேகரித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். பிறகு தான் சேகரித்த குப்பைகளை பிரதமர் நரேந்திர மோடி ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் வழங்கினார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்ட விடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் முதல் செய்திச் சேனல்களை வரை வைரலானது. இந்த நடைப்பயிற்சியின்போது அவர் அக்குபிரஷர் உபகரணத்தையும் தனது கையில் வைத்திருந்தார். 

இந்நிலையில், தனது கையில் இருக்கும் உபகரணம் குறித்து பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவிக்கையில், 

"மாமல்லபுரத்தில் நான் குப்பைகள் சேகரித்தபோது என் கையில் இருந்த உபகரணம் குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அது நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் உபகரணம். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com