Enable Javscript for better performance
தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம்: முன்னாள் நீதிபதிக்கு ரூ.20 லட்சம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published On : 11th September 2019 01:35 AM  |   Last Updated : 11th September 2019 01:35 AM  |  அ+அ அ-  |  

    supremecourt


    தவறான குற்றச்சாட்டில் பதவிநீக்கம் செய்யப்பட்ட மாஜிஸ்திரேட்டுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அவர் குஜராத் மாநிலத்தில் கடந்த 1981இல் நீதித்துறை பணியில் இணைந்தார். அதன் பின் 1992 முதல் 1994 ஆம் ஆண்டு வரை அந்த மாநிலத்தில் சிவில் நீதிபதியாகவும் மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி வந்தார். அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுககள் சுமத்தப்பட்டன. ஏழு ஜாமீன் உத்தரவுகளை அவர் சட்ட விதிகளுக்குப் புறம்பாக அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
    இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவரை தண்டிக்கும் வகையில் அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. அவர் இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அவர் மீது  ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது தவறு என்று தீர்ப்பளித்தது. எனினும், அவர் பணியில் இருந்து விலகி எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவரை மீண்டும் மாஜிஸ்திரேட் பணிக்குக் கொண்டுவர முடியாது என்று தீர்ப்பளித்தது.
    கட்டாய ஓய்வால் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்குமாறு கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    முன்னாள் மாஜிஸ்திரேட் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு தவறானது என்று குஜராத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி பதவிக்குத் தகாத எந்தச் செயலையும் அவர் செய்யவில்லை என்பதை உறுதிசெய்கிறோம்.
    அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளதால் அவரது கௌரவத்தையும் கண்ணியத்தையும் காக்க அவர் மீண்டும் பணிச்சேவைக்கு கொண்டு வரப்படுவது அவசியம். 
    எனினும், ஓய்வு பெறும் வயதை அவர் கடந்து விட்டதால் அவரை மீண்டும் நீதிபதியாக நியமிக்க இயலாது. கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட பின் பல ஆண்டுகளாக அவர் பணிபுரியவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ரூ.20 லட்சத்தை இழப்பீடாக வழங்குமாறு உத்தரவிடுகிறோம். இத்தொகையை அவருக்கு ஆறு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp