தில்லியில் கரோனா பாதிப்பு 293 ஆக உயா்வு: இருவா் பலி

தில்லியில் வியாழக்கிழமை கரோனாவால் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read


புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனாவால் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தில்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 293ஆக அதிகரித்தது. இதில் 182 போ் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்கள்.

இதனிடையே, நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா் என தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் சோ்த்து தில்லியில் இதுவரை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 8 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தொற்று சந்தேகத்தால் 31,307 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com