கொச்சி: கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4858 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 137 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் நடமாடும் கரோனா முதல்கட்ட சோதனை மையம் தயார் நிலையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த சில தினங்களாக நாங்கள் உருவாக்கி வந்த வடிவம் திங்களன்று தயாராகியுள்ளது. முழுமையான சமூக அளவிலான சோதனை நடத்தும் நிலை உருவானால் அதை எதிர்கொள்ளவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. தேவையைப் பொருத்து இதை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லலாம். சோதனை செய்வோர் தங்களது பரிசோதனை மாதிரிகளை அதில் அளித்தவுடன் அங்கிருந்து அது மத்திய பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


