தில்லியில் கரோனா பாதிப்பு 576 ஆக உயர்வு; தீவிர சிகிச்சைப் பிரிவில் 35 பேர்!

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளதாக தில்லிசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 576 ஆக அதிகரித்துள்ளதாக தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவர்களில் 35 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும், 8 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் பாதிப்பு எண்ணிக்கை 576 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. கெளதம் புத் நகா் மாவட்டத்தில் மட்டும் 58 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தில்லியில் கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com