

கரோனா பரவல் எதிரொலியாக உத்தரப் பிரதேசத்தில் 15 மாவட்டங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சீல் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லக்னோ, நொய்டா, காஜியாபாத், சீதாபூர், கான்பூர், ஆக்ரா, ஃபெரோஸாபாத், பரேலி, மீரட், ஷாம்லி, சஹாரன்பூர், புலந்த்ஷஹர், வாரணாசி, மகாராஜ்கஞ்ச் மற்றும் பஸ்தி ஆகிய மாவட்டங்களுக்கு சீல் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசு விளக்கம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இந்த 15 மாவட்டங்களில் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வீட்டிற்கே சென்று வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்றும் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.