கரோனா: தில்லியில் 24 மணி நேரத்தில் 5 பேர் பலி, 85 பேருக்கு தொற்று உறுதி

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா: தில்லியில் 24 மணி நேரத்தில் 5 பேர் பலி, 85 பேருக்கு தொற்று உறுதி
Updated on
1 min read


தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5 பேர் பலியாகியிருப்பதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். 85 பேரில் 26 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்திருக்கின்றனர். 

இதன்மூலம் மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,154 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. இதில் தில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 746.

மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,102 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். 6 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் உள்ளனர். 20 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 14,036 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 984 மாதிரிகளின் முடிவுகள் வரவில்லை. 11,748 மாதிரிகளுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com