டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்களுக்கு கரோனா

மும்பையில் டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்களுக்கு கரோனா
Updated on
1 min read

மும்பையில் டைம்ஸ் நெட்வொர்க்கின் ஆறு ஊழியர்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

'மும்பை மிரர் நவ்' நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பி.சி.ஆர் வேன் ஆபரேட்டர், இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த மூன்று பேர் என 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது

இதனால் கரோனா பாதிக்கப்பட்ட 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் பணியாற்றிய ஊழியர்களும் மும்பை தாஜ் ஹோட்டலில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மும்பையில் உள்ள டைம்ஸ் நெட்ஒர்க் அலுவலகமும் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com