6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்தது: ஐ.சி.எம்.ஆர். தகவல்

சீனாவில் இருந்து 6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது. 
6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்தது: ஐ.சி.எம்.ஆர். தகவல்
Updated on
1 min read

சீனாவில் இருந்து 6.5 லட்சம் விரைவு பரிசோதனை கருவிகள் இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தகவல் தெரிவித்துள்ளது. 

சீனாவில் இருந்து 30 லட்சத்துக்கும் அதிகமாக ரேபிட் கிட்ஸ் எனப்படும் விரைவு பரிசோதனைக் கருவிகளை இந்தியா ஆர்டர் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக 6.5 லட்சம்  விரைவு பரிசோதனை கருவிகள் சீனாவின் குவாங்சோ நகரத்தில் இருந்து இந்தியாவுக்கு இன்று காலை ஏற்றுமதியான நிலையில், அவை இந்தியா வந்தடைந்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தகவல் வெளியிட்டுள்ளது.

இன்று பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது ஐ.சி.எம்.ஆர். தரப்பில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

கரோனா விரைவு பரிசோதனைக்கு இந்த கருவிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com