

இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை நிலவரப்படி 14,378 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 11,906 ஆக உள்ளது. இதுவரை 1,991 பேர் குணமடைந்துள்ளனர். 480 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.
மகாராஷ்டிரம், தில்லி, மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளைக் கொண்ட மாநிலங்களாக இருந்தன.
தற்போது குஜராத் மாநிலத்திலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்றைய நிலவரப்படி 1,099 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 41 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுடன் குஜராத் 6வது மாநிலமாக இணைந்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு மூன்று ஆயிரத்தைத் தொட்டுவிட்ட நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பு இரண்டு ஆயிரத்தை நெருங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.