புது தில்லி: வடக்கு தில்லியில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து 4 இளைஞர்கள் தப்பித்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் பொறுப்பாளர் அளித்த புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் நான்கு இளைஞர்கள் கரோனா மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நால்வரில் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர், ஒருவர் உ.பி, ஒருவர் அசாம் மற்றொருவர் தில்லியில் வசிப்பவர் ஆவார்.
சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையம் மெகசின் சாலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் கட்டப்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!

கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி!

சரியான நடுநிலையாளர் அல்ல! பாகிஸ்தான் மத்தியஸ்தம் குறித்து ஈரான் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


