புது தில்லி: கரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு மிக முக்கியத் தேவை வென்டிலேட்டர். ஆனால், பொதுவாகவே அரசு மற்றும் பெரிய தனியார் மருத்துவமனைகளில் கூட தற்போதிருக்கும் வென்டிலேட்டர் வசதி என்பது மிகவும் குறைவானதே.
இதனால் கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருப்பது வென்டிலேட்டர். ஆனால், ஒரு சவாலில் தான் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு பலருக்கு சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பத்தை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சிறுநீரக நோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு பலருக்கு சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் விநீத் மிஷ்ரா கூறுகையில், பொதுவாக ஒரு வென்டிலேட்டரைக் கொண்டு ஒரு நோயாளிக்குத்தான் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இங்கு வென்டிலேட்டர் வசதி இல்லை. எனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே வென்டிலேட்டரில் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


