கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கு தளர்வு

அபாயப் பகுதி மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கை சற்று தளர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கர்நாடகத்தில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கு தளர்வு
Updated on
1 min read

பெங்களூரு: அபாயப் பகுதி மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வியாழக்கிழமை முதல் ஊரடங்கை சற்று தளர்த்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 23ம் தேதி முதல் சில குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று மாநில முதன்மைச் செயலாளர் டி.எம். விஜய பாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி, விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம், அத்தியாவசியப் பொருட்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யலாம், சிமெண்ட், இரும்பு, டைல்ஸ், செங்கல் உற்பத்திக்கும், சாலையோர உணவகங்களை இயக்கவும் அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

கட்டுமானப் பணிகளும், சாலைகளை சீரமைக்கும் பணிகளும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி மையங்கள் மே 3ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com