

ஸ்ரீநகர்: கரோனா தொற்றுடன் போராளிகளை ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கண்டேர்பால் மாவட்டம் மணிகாம் பகுதியில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியின் உள்பகுதியில், மாநில காவல்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் கரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களை அவர் புதனன்று பார்வையிட்டார். அங்குள்ள வசதிகள் குறித்து விசாரித்து அறிந்ததுடன், அந்தப் பகுதியின் பாதுகாப்பு நிலவரம் குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் கூறியதாவது:
இதற்கு முன்னர் வரை ஆயுதம் மற்றும் வெடிகுண்டுகளைத் தாங்கிய போராளிகளை பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஊடுருவச் செய்து கொண்டிருந்தது. தற்போது கரோனா தொற்றுடன் போராளிகளை ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்பும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
அவர்கள் மறைந்திருந்து தங்களது செயல்பாடுகள் மூலம் கரோனா வைரஸ் தொற்றைப் பரப்ப முடியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.