டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்றவர்கள் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இருதலைப் பாம்பு
இருதலைப் பாம்பு
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெங்களூரிவில் கரோனா ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுதேடிச் சென்று வழங்கும் பணியினை ‘டன்சோ’ என்னும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அதன் ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களில் நகரம் முழவதும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பெங்களூருவில் ‘டன்சோ’ டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அம்மாநில மத்திய குற்றப் பிரிவு காவல்துறை இணை ஆணையர் சந்தீப் பாட்டில் தனது ட்விட்டர் பக்கத்தில்,’ ‘டன்சோ’ டெலிவரி பையன்களை போல் வேடமிட்டு இரு தலை பாம்பை விற்க முயன்ற இருவரை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்’ என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தப் பாம்புகள் 1972-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வன உயிரின பாதுகாப்புச் சட்டப் பிரிவு 4-இன் படி பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக செய்தயாளர்களிடம் பேசிய குற்றப் பிரிவு காவல்துறை உதவி ஆணையர் குல்தீப் ஜெயின் கூறியதாவது:

முஹமது ரிஸ்வான் மற்றும் அசார் கான் ஆகிய இரு இளைஞர்களும் அந்த பாம்புகளை ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்கள். இந்த வகைப் பாம்புகள் மருத்துவ குணம்       கொண்டவை என்பதோடு, அதை வீட்டில் வைத்திருந்தால் அதிர்ஷ்டம் வரும் என்றும் நம்பப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com