புது தில்லி: கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவுதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்றவை கரோனாவில் இருந்து நம்மைக் காக்கும் என்பது பலருக்கும் தெரிந்ததே. ஆனால், தெரியாதது, நாம் உடுத்தும் ஆடைகளும் கரோனாவைக் கடத்தும் என்பதுதான்.
வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும், வீட்டுக்குள் வந்ததும் கைகளை சோப்புப் போட்டுக் கழுவுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு நாம் உடுத்தியிருந்த ஆடைகளை வீட்டில் இருப்பவர்கள் யாரும் தொடாமல், வேறு எந்தப் பொருளிலும் பட்டுவிடாமல் நேராக சலவை இயந்திரத்தில் போட்டு உடனடியாக துவைத்து விடுவதும் முக்கியம்.
அதே சமயம், மருத்துவமனை போன்றவற்றில் பணியாற்றுவோர், வீட்டுக்கு வந்ததும், யார் கை படாமலும், தங்களது துணியை சலவை இயந்திரத்தில் தனியாகப் போட்டு துவைத்து நன்கு சூரிய வெளிச்சத்தில் காய வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவேளை கரோனா தொற்று உடைகளில் ஒட்டிக் கொண்டிருந்தால், அதன் மூலம் வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு கரோனா தொற்று பரவாமல் தடுக்க இது நிச்சயம் உதவும்.
வீட்டில் இருப்பவர்களும் தினமும் துவைத்த சுத்தமான ஆடைகளை அணிவதும், ஆடைகள் மட்டுமல்லாமல், துண்டு போன்றவையும் அவ்வப்போது துவைத்து சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


