ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா உறுதி

ஆந்திர மாநிலத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ஆந்திரத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா உறுதி
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் மேலும் 82 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆந்திரத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

கரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில் கூறியதாவது: 

ஆந்திரத்தில் இன்று மேலும் 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கர்னூல் - 40, குண்டூர்-17, கிருஷ்ணா - 13, கடப்பா-7,நெல்லூர் - 3 அடங்கும்.

இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 1,259 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணா மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆந்திரத்தில் மொத்தமாக 258 பேர் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 31 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாதிப்பு 29,435, உயிரிழப்பு 934 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com