பாஜகவின் நட்பைக் கைவிட்டால் மட்டுமே அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் பேச்சுவார்த்தை: காங்கிரஸ்

​காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் நட்பைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
​காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் நட்பைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
​காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் நட்பைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். (கோப்புப்படம்)
Updated on
1 min read


காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜகவின் நட்பைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதா என்று கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

"அதிருப்தி எம்எல்ஏ-க்கள் காங்கிரஸ் கட்சியுடன் முதலில் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள் பற்றி பேச வேண்டும். மானேசரில் ஹரியாணா காவல் துறையின் பாதுகாப்பையும், பாஜகவின் உதவியையும், நட்பையும் அவர்கள் கைவிட வேண்டும்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com