மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து பையில் இந்தியா கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் நவி மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.