அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை இறங்கும் நிகழ்ச்சி

அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை கீழிறங்கும் நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது.
அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை இறங்கும் நிகழ்ச்சி
Updated on
1 min read

அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை கீழிறங்கும் நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெற்றது.

நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்கள் கோட்டை கொத்தளங்களில் கொடியேற்றி உரையாற்றினர். 

மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிநபர் இடைவெளியுடன் தேசியக் கொடியேற்றி சுதந்திர தின விழாக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம், அட்டாரி - வாகா எல்லையில் தேசியக் கொடியை இறங்கும் நிகழ்ச்சி கரோனா காரணமாக மக்கள் கூட்டம் இன்றி எளிய முறையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியையொட்டி வாகா எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com