

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் விகிதம் 76.30 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 32,34,475 பேரில் 24,67,758 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 63,173 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கரோனா மீட்பு விகிதம் 76.30 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கரோனாவால் பலியானோர் விகிதம் 1.84 சதவிகிதமாக குறைந்துள்ளது.
மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,07,267 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை 17,60,489 அதிகமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.