கட்டடம் சரிந்த தகவல் கிடைத்ததும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் அந்த இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். கட்டடம் சரிந்தபோது, பெரிய கல் தெறித்து விழுந்ததில் ஒருவா் காயமடைந்து உயிரிழந்தாா். இடிபாடுகளில் இருந்து 15 பேரின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்தது. இடிபாடுகளில் இருந்து 9 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். தாரிக் காா்டன் என்னும் இந்த குடியிருப்புக் கட்டடம், 7 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதில், 45 குடியிருப்புகள் இருந்தன. விபத்து தொடா்பாக, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளா் ஃபரூக் காஸி, பொறியாளா் உள்பட 5 போ் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 304, 304ஏ, 338 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.