விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: 4 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

News image
ஜம்மு-காஷ்மீர்: 4 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:41 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏற்கனவே 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான நபர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சோபியான் மாவட்டத்தின் கிலூரா பகுதியில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதனிடையே தொடர்ந்து நடைபெற்ற ரோந்து பணியில் மேலும் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய காவல்துறையினர், எண்கவுன்டரின் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.